×

மது விற்ற 3 பேர் கைது

 

ஈரோடு, ஜூலை 15:சத்தியமங்கலம் ஜெயசக்தி தியேட்டர் பின்புறம் மது விற்பனை நடைபெறுவதாக சத்தி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சோதனை நடத்தியதில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கருப்பையா (32) என்பவரை கைது செய்தனர். இதே போல சத்தி, வடக்குபேட்டை அண்ணாநகரில் மதுவிற்பனை செய்த சுப்பிரமணியம் (72) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் தலா 11 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பங்களாப்புதூர் போலீசார் நடத்திய சோதனையில், டிஜி புதூர் டாஸ்மாக் கடை அருகே மது விற்பனை செய்த புதுக்கோட்டை மாட்டம், புதுபட்டியை சேர்ந்த செழியன் மகன் மணிகண்டன் (26) என்பவரை போலீசார் கைது செய்து 7 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Sathya Police ,Sathyamangalam Jayasakthi Theatre ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது